புதன், 22 ஜூன், 2016

எண் 1

பிறந்தவருக்குரிய பலன்கள்  சூரியன் நட்சத்திரம்  :-   கார்த்திகை, உத்திரம், உத்திராடம் எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது.நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சிசெய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம்இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலைவாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும்அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும்எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்றுநினைப்பவர்கள்.
அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள்இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்குஅமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும்செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமானஅரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள்மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமம், பணவேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம்காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள்.மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பானநடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டுசெல்லும்.
மனிதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள்.தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத்துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள்.புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள்.நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்றஎண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றம்அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்றுஅதற்காகச் செலவு செய்வர்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச்செலவு செய்யத் தயங்காதவர்கள்.
தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம்அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரதுஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றிபெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத்தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களைஎல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான்.
தங்களின் இரக்ககுணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்லபெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன்,இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறிவிடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும்உண்டு.
வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதைநிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும்,பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும்சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே.
படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண்சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலைவாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்.
எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும்கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியைஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன்மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள்அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது.அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள்.ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்குசெய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்துமன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் மாண்பு படைத்தவர்கள்.மீண்டம் அவர்களுக்கு உதவியும் செய்வார்கள். பொதுவாகத்திருமணம் காலம் கடந்தே நடைபெறும். காதல் விஷயங்களில்ஈடுபாடு ஏற்படும் என்றாலும், ஏமாறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மனைவிக்கும், நேரம் ஒதுக்கி, அவளை மகிழ்ச்சியாகவைத்திருக்க வேண்டும்.
அரசியலில் வெற்றி பெற, ஒரு புகழ்பெற்ற கட்சியோ, அல்லதுஇயக்கமோ இவர்களுக்குத் தேவை. காரணம் மக்களை ஆசை காட்டிஏமாற்றும் வித்தைகள் இவர்களுக்குத் தெரியாது. பொதுமக்களுக்குஉண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச் செய்வார்கள்.பொதுமக்களுக்கு உண்மையான மனத்துடன் துணிந்து நன்மைகளைச்செய்வார்கள்.
மக்களுக்குப் பிடிக்காத செயல்களையும், மக்களின்பிற்கால நன்மைகளுக்காகத் துணிந்து காரியங்களைச்செயல்படுத்துவார்கள். எண்ணின் பலம் குறைந்தால் மேற்சொன்னபலன்கள் மாறுபடும். சோதிடம், ஆன்மீகம், வைத்தியம் போன்றகலைகளில் ஈடுபடும் உண்டாகும். தனிமையில் அதிகமாகச்சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.
உடல் அமைப்பு
நடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றியும்உண்டு. நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவமம் உண்டு.உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு.நடையில் ஒரு கம்பிரம் காணப்படும். பெண்களாக இரந்தால் ஓரளவுஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. கணவனைத்தனது ஆதரவிற்குள் கொண்டு வருவார்கள். அவரை நல்ல வழியில்உயர்த்தி விடுவார்கள். அன்பையும், கடினமாகவே காட்டுவார்கள்.நல்ல தலைமுடியும் உண்டு. கண்களில் கூச்சம், பார்வைக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கதைப்பிடிப்பான தோற்றம்உண்டு. அடிக்கடி தலைவலி ஏற்படும்.
அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டுகூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ந் தேதி நடுத்தரப்பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள்தானே வரும். ஆனால் நாம் தேடிச் சென்றால் தலைகீழ பலன்களேஏற்படும். 2, 7, 11, 16, 20, 25, 29 தேதிகளில் ஓரளவு நல்ல பலன்கள்ஏற்படும்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
    தங்க மோதிரம், ஆபரணங்கள் அணிவது நன்மை தரும்.
    2. மாணிக்கம் (RUBY), புட்பராகம் (Topaz), மஞ்சள் புஷ்பராகம்அணிவது மிக்க நலம் தரும்.
    3. சிவப்பு ரத்தினத் (Red Opal) தில், சூரிய காந்தக்கல் (Sun Stone)ஆகியவையும் மிக்க நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்
பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகியநிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும்வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.
1-ம் தேதி பிறந்தவர்கள்
பொதுவாகத் தன் விருப்பபடியே நடப்பவர்கள். இவர்களுக்கு பிறரைஅனுசரித்து போகும் குணம் குறைவு. பொறுமையுடன்,மற்றவர்களையும் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில்பெரும் வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை மிக உண்டு. அரசுமற்றும் அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வார்கள்.
10-ம் தேதி பிறந்தவர்கள்
சூரிய ஆதிக்கம் ஓரளவு குறைந்துள்ளதால், மற்றவர்களை அனுசரித்துஅன்புடன் நடந்து கொள்வார்கள். எதிலும் ஒரு நிதானம், ஆலோசனைஉண்டு. எப்படியும் புகழ் அடைந்து விடுவார்கள். மனோ சக்தியும்,தன்னம்பிக்கையும் உண்டு. பொருளாதாரத்தில் மட்டும் அடிக்கடிஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பணம் நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
19-ம் தேதி பிறந்தவர்கள்
மிக்க அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்படும். தனது கொள்கையில்ஈடுபாடும், பிடிவாதமும் கொண்டவர்கள். தங்களது நடை உடைபாவனைகளில் கெடுபிடிகள் காட்டுவார்கள். பல செய்திகளையும்அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு. அன்பால் மற்றவர்களைவெற்றி கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.படிப்படியான முன்னேற்றம் உண்டு.
28-ம் தேதி பிறந்தவர்கள்
சூரிய ஆதிக்கம் மிகவும் குறைவு. பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள்அடிக்கடி ஏற்படும். மென்மை உணர்வுகள் இருக்கும். மற்றவர்களைஅனுசரித்துச் செல்வதாலும், பாசமுடன் பழகுவதாலும், நண்பர்கள்,உறவினர்கள் ஆகியோரின் அதரவு உண்டு. அதனால் ஜாமீன்,கைமாற்றுக் கொடுத்துவிட்டு பின்பு பாதிப்பிற்கு உள்ளாவதும்உண்டு. 2, 8 இணைந்து வருவதால் வீண் கர்வம், டம்பப் பேச்சுஆகியவைகளைக் குறைத்துக் கொண்டால், பண இழப்புகளையும்,விரயங்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். நண்பர்கள் மற்றும்உறவினர்களால் பண விஷயங்களில் ஏமாறாமல் பார்த்துக்கொண்டால், பல நன்மைகளை அடையலாம். சூரியனின் சக்கரம்யந்திரம் & சூரியன் & 15
6 1 8
7 5 3
2 9 4

எண் 1 சிறப்புப் பலன்கள்
எண்1 ல் பிறந்தவர்கள் (விதி எண் 1 எண்காரர்கள் கூட) இந்தஎண்களின் சக்தியானது தொழில் வகையிலும், அரசியல் வகையிலும்,சமூக வகையிலும் நல்ல பலன்களைக் கொடுத்தாலும், இவர்களதுகுடும்பத்தில், மனைவி அமைவதில் மட்டும் சில குறைபாடுகளைக்கொடுத்து விடுகிறது. இநத் எண்ணில் பிறந்த (அல்லது) பெயர்அமைந்த சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைகிடைக்கிறது.
ஆனால் பெரும்பாலோருக்கு இல்வாழ்க்கை என்பதுதாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமைகின்றது.அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள்அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது.
இது தொழில் சம்பந்தமானபிரிவுகள் போன்ற தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும்.காதல் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவேஇந்த அன்பர்கள் திருமணத்தை மட்டும் தங்களுக்கு அனுகூலமானதேதிகளில் பிறந்தவர்களுடன் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் இவர்களுக்கு நிச்சயம் இல்லற இன்பம் அனுபவிக்கலாம்.
இந்தஎண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண்) எந்த ஒருசெயலையும் 4, 8 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்)செய்யக்கூடாது. திருமணம், சடங்ககுள், புதுமனை புகுதல்,புதுக்கணக்கு, இடம் மாறுதல், புதிய உத்தியோகம், அல்லது உயர்பதவி ஏற்றல் கூடாது. மேலும் புதியதாகக் கடை ஆரம்பித்தல், கடன்கேட்கச் செல்லுதல்(?) பெரிய மனிதர்களை பார்க்க செல்லுதல்,புதுப்பயிர் செய்தல், புதுக்கிணறு தோண்டுதல் ஆகியவைசெய்யக்கூடாது.
நண்பர்கள்
இவர்களுக்கு 1, 2, 3, 4, 5, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்தான்நல்ல கூட்டாளிகளும், நண்பர்களாகவும் இருப்பார்கள்.
திருமணம்
இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்துகொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்துகொள்ளலாம். 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும்.காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதேசூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப்பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.
திருமண தேதி
1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும். (இவர்களுக்குத்தேன் மிகவும் சிறந்தது. அடிக்கடி உணவில் தேனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொன்னாங்ககண்ணிக் கீரையும் மிகவும் ஏற்றது.கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் வித்த நீர் ஓட்டம்சமப்படும். நோய்களின் கடுமை குறைந்து வரும். இயற்கைவைத்தியத்தில்தான் இவர்களது நாட்டம் செல்லும்.)
நோய்களின் விபரங்கள்
சூரியன் ஒரு நெருப்புக் கோளம். இதனால் இந்த எண்காரர்கள்பெரும்பாலும் வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள். மலச்சிக்கல்அடிக்கடி உண்டாகும். பித்த நீர் ஓட்டம் மிகுந்துவிடும். எனவே, இரத்தஓட்டம் சம்பந்தமான பலவித நோய்களும் குறைபாடும் உண்டாகும்.கண் பார்வை குறைபாடுகளே பெரும்பாலும் இவர்களுக்கு ஏற்பம். பலஅன்பர்களுக்கு அடிக்கடி தலைவலியும் ஏற்படும். அடிக்கடிகண்ணாடிகளை மாற்றிக் கொள்வார்கள். இரத்தக் கொதிப்புப, சீரணக்கோளாறுகள், படபடப்பு ஆகியவையும் ஏற்படும். பித்த சம்பந்தமானநோய்களும் ஏற்படலாம்.
எனவே இவர்கள் பழவகைகளை அதிகம்சேர்த்துக் கொள்ள வேண்டும். காரம், புளிச்சுவையையும், சீரணத்தைமந்தப்படுத்தும் உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ, ஆரஞ்சுப்பழம், சாதிக்காய், இஞ்சி,பார்லி ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். முன்பே சொன்னபடி தேனைத் தினந்தோறும் உண்டுவந்தால் மிக்க நலம்பெற்று வாழ முடியும்.
நண்பர்கள்
4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாகஇருப்பார்கள். 2, 7 தேதிகளில் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

வேண்டாத  நாட்கள்
8, 17, 26 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 8 வரும் எண்கள் நாட்களும்புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. தோல்வியே ஏற்படும்.இவர்களுக்கு மக்கட்பேறு உண்டு.
எண் 1 க்கான  தொழில்கள்
இவர்கள் பொதுவாக நிர்வாக சக்தி நிரம்பியவர்கள். எப்போதும்அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழேஉள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்தி நிறைந்தவர்கள்.உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படிசெயல்படவே விரும்புவார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்மஸ்தாபனங்கள், கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள்,தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நிர்வாகியாக அமைவார்கள்.எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கையான குமாஸ்தாவாகஇருப்பார்கள்.
தனியாக நிறுவனங்களை நடத்தும் திறமை மிக்கவர்கள். ஆனால்,வளைந்து கொடுக்கவோ, அனுசரித்துப் போகவோ தெரியாதவர்கள்.இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும்இவர்களது நோக்கமாக இருக்கும். போட்களில் விட்டுக் கொடுக்கத்தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்தி உண்டு.இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும்காட்டிவிடும். தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால்அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், உடனே சமாளித்துவிடுவார்கள். அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், GEMS வியாபாரிகள் போன்ற தொழில்களும் ஒத்து வரும்.விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித்துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும்.
வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை,பழவகைகள், காய்கறி வகைகள், ஆபரணங்கள், செயற்கைநூலிழைகள் (Fibress) மூலிகைகள் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள்,பிராணிகள் பராமரிப்பு, தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்க-ளுக்கு ஏற்ற தொழில்கள். இவர்கள் தங்களது வியாபாரயுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் காலத்திற்கேற்றபடிமாற்றிக்கொண்டு செயல்பட்டால், தங்களது தொழிலில் பெரும்வெற்றிகளைக் குவிக்கலாம்.
நவக்கிரக மந்திரங்கள் – சூரியன்
சூரியன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சூரிய தசை அல்லதுசூரிய அந்தர் தசையின் போது:
சூரியனின் கடவுளான சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
தினசரி ஆதித்ய ஹிருதய ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.
தினசரி காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.
சூரிய மூல மந்திர ஜபம்:
“ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”,
48 நாட்களில் 6000 முறை சொல்ல வேண்டும்.
சூரிய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!
தமிழில்,
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!
48 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
தொண்டு: ஞாயிறன்று நன்கொடையாக கோதுமை, அல்லது சர்க்கரைமிட்டாய் கொடுக்க வேண்டும்.
நோன்பு நாள்: ஞாயிறு.
பூஜை: ருத்ர அபிஷேக பூஜை.
ருத்ராட்சம்: ஏகமுகி (ஒரு முகம்) அல்லது 12 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சூர்ய காயத்ரி மந்திரம்
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||
சூரிய தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 73வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சூரிய பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி     சிம்ம ராசி     திக்கு     நவக்கிரகங்களுக்கு நடுவில்
அதி தேவதை     அக்கினி     ப்ரத்யதி தேவதை     உருத்திரன்
தலம்     சூரியனார் கோயில்     வாகனம்     ஏழு குதிரை பூட்டிய தேர்
நிறம்     சிவப்பு     உலோகம்     தம்பாக்கு
தானியம்     கோதுமை     மலர்     செந்தாமரை
வஸ்திரம்     சிவப்பு ஆடை     ரத்தினம்     மாணிக்கம்
நைவேத்யம்     கோதுமைசக்ரான்னம்     சமித்து     வெள்ளெருக்கு
   சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
சூரிய பகவான் கீர்தனைகளை ஸௌராஷ்ட்ர ராகத்திலும்,
சூர்ய பகவான் கீர்த்தனம் – பல்லவி
ஸூர்ய மூர்த்தே நமோஸ்துதே ஸூந்தரச்சாயாதிபதே
அனு பல்லவி
கார்ய காரணாத்மக ஜகத் ப்ரகாஸக ஸிம்மராஸ்யாதிபதே
ஆர்ய வினுத தேஜஸ் பூர்த்தே ஆரோக்யாதி பலத கீர்த்தே
சரணம்
ஸாரஸ சித்ர மித்ரபானோ ஸஹஸ்ரகிரண கர்ண ஸூனோ
க்ரூர பாபஹர க்ருஸானோ குருகுஹ மோதித ஸ்வபானோ
ஸூரிஜனேடிதஸூதினமனே ஸோமாதி க்ரஹ ஸிகாமனே
தீரார்ச்சித கர்ம ஸாக்ஷிணே திவ்யதர ஸப்தாஸ்வரதிநே
ஸௌராஷ்ட்ரார்ண மந்த்ராத்மனே ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே
பாரதீஸ ஹரிஹராத்மனே பக்தி முக்தி விதரணாத்மனே  ( ஸூர்ய )
சூர்ய மூர்த்திக்கு நமஸ்காரம். கிரகங்கள் அனித்திற்கும் முதல்வராய்விளங்குபவரே, அழகிய சாயாதேவியின் கணவரே, அனைத்திற்கும்காரணமானவரே, மிகுந்த தேஜஸ் கொண்டவரே, தாமரைக்கும்,உலகிற்கும் நண்பரே, ஞானிகளால் துதிக்கப்படுபவரே, ஒளிதருபவரே, சிம்ம ராசியின் தலைவரே, ஆர்யரால் வணங்கப்படுபவரே, ஆரோக்யம் தருபவரே, கீர்த்தி மிக்கவரே, ஆயிரம் கிரணங்கள்கொண்டவரே, பாவம் போக்குபவரே, அக்னி மயமானவரே, ஏழுகுதிரைகள் பூட்டிய தேரினில் பவனி  வருபவரே, மந்த்ர வடிவானவரே,தங்க நிறம் கொண்டவரே, பக்தியையும், முக்தியையும் அளிப்பவரேஉம்மை வணங்குகின்றேன்.
சூர்ய பகவான் முமூர்த்திகளிம் அம்சமாய் விளங்குபவர். சர்வ மங்களம்வழங்குபவர். தன்னை வழிபடுபவரது மனக் கவலைகள், பகைமை,சங்கடங்களை போக்குபவர். நினைத்த கரியங்களை நிறைவேற்றஅருள்பவர். கண் நோய்கள், இருதய நோய்கள் மற்றும் கமாலைநோய்களை போக்குபவர். சிவந்த நிறமும், செவ்வாடையும்அணிந்தவர். செம்மலர் சூடியவர். பத்மாசனத்தில் கிழக்கு முகம் நோக்கி தன் இரு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தியுள்ளவர்.சிவாலயங்களில் பரிவார தேவததையாக விளங்குபவர். தினந்தோறும்சூரிய நமஸ்காரம் செய்திட கண்கள் ஒளி பெருகும். சூரிய பகவான் சாத்வீக குணம் கொண்டவர். இவர் ஒரு சுப கிரகம். மாதம் ஒரு ராசிஎன 12 மதங்களும் 12 ராசிகளில் சஞ்சரிக்கின்றார். ஜதகத்தில் ஆத்மா,தந்தை, தலை, சரீரம், உத்யோகம், வலது கண், பித்தம், மனச் சிலேகம்,ஜுரம், யாத்திரை, தைரியம், புகழ், உடல் நலம். ஆட்சித் திறன்போன்றவைக்கு காரணமானவர்.
சிறப்பான சில குறிப்புகள்
எண்  :                           – 1
எண்ணுக்குறிய  : கிரஹம் : சூரியன்
அதிர்ஷ்ட  :  தேதிகள்   : 1, 10, 19, 28, 2, 11, 29
அதிர்ஷ்டகிழமை :  ஞாயிறு, புதன், திங்கள்
அதிர்ஷ்ட  :  மாதங்கள் – ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜுலை,நவம்பர், அக்டோபர்
அதிர்ஷ்ட ரத்தினங்கள்   :  மாணிக்கம், மஞ்சள் புஷ்பராகம்
அதிஷ்ட  :  திசை – கிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்     :   சிகப்பு, மஞ்சள் சிகப்பு கலந்த நிறம்
அதிர்ஷ்ட  :  தெய்வங்கள் – மஹாவிஷ்ணு, சிவன்
அதிர்ஷ்ட  :  மலர்கள் – செந்தாமரை, ரோஜா
அதிர்ஷ்ட தூப, தீபம்   :  சந்தனம் கலந்த தூபம் அல்லது தீபம்அதிர்ஷ்டம் அளிக்கும்
அதிர்ஷ்ட சின்னங்கள்   :  உதய சூரியன், மயில், தேர், ராஜா,ஒளிரும்தீபம்
அதிர்ஷ்ட :  மூலிகைகள் :  விஷ்ணமூலிகை, வில்வம்
அதிர்ஷ்ட யந்திரங்கள்  :  சிதம்பர சக்கரம், ஏர்ஒளிவசிய சக்கரம்
அதிர்ஷ்ட எண்கள்   :  1,10,19,28,37,46,55,64,82,91,100.
அதிர்ஷ்ட  :  உலோகம் – தங்கம்
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை  :       8, 17, 26
ஆகாத : தேதிகள் – 8, 17, 26
ஆகாத : நிறம்  – கருப்பு,  சிவப்பு , காப்பிகலர்

சனி, 24 ஜனவரி, 2015

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன.


ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன.

அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.

லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி.

வாசு(ஸ்)கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது.

வாசு(ஸ்)கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள்.

இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.

அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.

ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.

1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர்.

ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்து போய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.

1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.

அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.

இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.

இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பாலசு(ஸ்)தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.

தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால் வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.

இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது.

இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர்.

இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை.

கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலசு(ஸ்)தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம்.

யூகோசு(ஸ்)லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாசி, போசு(ஸ்)போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.

இந்தியா, சீனா போர் நடக்கும் போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.

வங்கதேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிசு(ஸ்)தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது.

வங்கதேசம் பிரியும்போது பாகிசு(ஸ்)தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன் தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.

இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது.

அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா (Voice of America)வுடைய ராடர்களை (Radar) அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிசு(ஸ்)தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் (Polymetallic) பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செச(ஷ)ல்சு(ஸ்) (Cesals)தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது.

இராணுவத் தளவாடங்கள், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.

ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.

தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராச(ஜ)பட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார்.

இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.

இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.

ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டது போல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாசி(ஜி), போசு(ஸ்) போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.