ஞாயிறு, 9 நவம்பர், 2014

மதம்

மதம் 

மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு  கட்டுபாடுகளை  ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)
திராவிடம் ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் மதத்தை  எப்படி ஆதரிக்கின்றன என்பதை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.

அடிப்படையில் திராவிடம் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை ஆனால் மதங்களின் பெயரால் சிலரால் தங்கள் சுயநலத்துக்காக உருவாக்கபட்டதுதான் சாதி. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒழிக்க முடியவில்லை ஏன் என்றால் அங்கு அவர்கள் வாழ்க்கையில் கலந்து விட்டது. ஏன் என்றால் அது மதத்தில் இல்லை அவர்கள் மனதில் (நாள் எல்லோரையும் குறிப்பிடவில்லை).
இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான்  காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள்  தெரியுமமா? கந்தா...! ஜெசப்பா! மாரி அம்மா...! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!
எந்த மதமாகினும்  மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை).

இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.
ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.
எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது!

சிலர் சொல்ல்கிரார்கள் கடவுள் இல்லை என்று. சிலர் சொல்வார்கள் மதம் போய் என்று. சிலர் சொல்ல்வர்கள் சடங்குகள் மூட நம்பிக்கை என்று. இப்படி கதைத்தால் பகுத்தறிவாளிகளாம்.
கடவுள் என்ற ஒன்று இருக்கா இல்லையா? நம்மை மீறிய ஒரு சக்தி ஒன்று உள்ளது ! இதை யாராலும் மறுக்க முடியாது!ஏன் 99% (அண்ணளவாக) விஞ்ஞானிகள் கூட கடவுளை நம்புகிறனர்!
ஆனால் மனிதன் கடவுளை நோக்கும் விதம்தான் மதங்களுக்கு மதம்(மதச்சடங்குகள்) வேறுபடுகிறது. அது ஒரு குறிப்பிட்ட மதம் உருவாகும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் புவியியல் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு அமைகின்றன.
இந்து சமயம் உருவாக்கம் (ஆதிக்கம் செலுத்தும் பகுதி) தெற்குஆசியா  ஆகும்.இந்து சமயத்தின் கடப்பாடுகளும் சம்பிரதாயங்களும்,ஆடைகளும், தெற்குஆசிய காலநிலைக்கு ஏற்றவாறு காணப்படுகிறன.
இவ்வாறுதான் இஸ்லாமும் கிறிஸ்தவம் ஆகியன உருவாகும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் புவியியல் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு காலநிலைக்கு எற்றவாறு அதன் கடப்பாடுகளும் சம்பிரதாயங்களும்,ஆடைகளும் காணப்படுன்றன.
சில பகுத்தறிவாளிகள் என்று தங்களைதானே சொல்லி கொள்வார்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் பிரிக்கபார்கிறார்கள்.மதம் வேண்டாமாம் கலாச்சாரம் வேண்டுமாம்.எந்த ஒரு கலாச்சாரம் தோன்றுவதற்கும் காரணம் மதம்தான்.அப்படியானால் இவர்கள் வேரை பிடிங்கி விட்டு மரம் வளர்க்க பார்கிறார்களா?இதுக்கு பெயர்தான் பகுத்தறிவா?  இது ஒரு வகையானவர்கள்.
அடுத்தது இன்னொரு வகையானவர்கள் சடங்குகள் எல்லாம் மூடநம்பிக்கைகளாம். ஒரு மதத்தின் சடங்குகள் சடங்குகள் ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் உருவாக்கபட்டன! சில சடங்குகள் இப்போதைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தேவை இல்லாமல் போகலாம் ஆனால் எல்லா சடங்குகளையும் நாம் ஒதுக்கி விட முடியாது.(ஆனால் மூடநம்பிக்கையான சில செயல்களை ஏற்று கொள்ள முடியாது.)
எல்லா மதமக்களிலும் மூடநம்பிக்கை மத கடப்பாடுகளுக்கு புறம்பான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இது நிச்சயம் தங்களுடைய மதம் பற்றிய அறிவின்மை காரணம் ஆகும். இன்னொரு விடயம் ஒரு மதம் இன்னொரு பிரதேசக்கு பருவும் போது சில மதக்கடப்பாடுகள் தேவையற்றனவாக  போய்விடுகின்றன.உதாரணத்துக்கு இஸ்லாம் மற்றும் இந்துக்களின் ஆடைக்கடப்பாடுகள் எல்லா பிரதேசத்துக்கும் பொருந்தாது.
.
மதம் -2
மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு  கட்டுபாடுகளை  ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)
திராவிடம் ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் தமிழகத்தில் உள்ள இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் மதத்தை  எப்படி ஆதரிக்கின்றன என்பதை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.

அடிப்படையில் திராவிடம் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை ஆனால் மதங்களின் பெயரால் சிலரால் தங்கள் சுயநலத்துக்காக உருவாக்கபட்டதுதான் சாதி. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒழிக்க முடியவில்லை ஏன் என்றால் அங்கு அவர்கள் வாழ்க்கையில் கலந்து விட்டது. ஏன் என்றால் அது மதத்தில் இல்லை அவர்கள் மனதில் (நாள் எல்லோரையும் குறிப்பிடவில்லை).
இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான்  காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள்  தெரியுமமா? கந்தா...! ஜெசப்பா! மாரி அம்மா...! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!
எந்த மதமாகினும்  மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை).

இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.
ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.
எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது!

யாழறிவன்... Yalarivan Jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக