வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள்...!

தமிழன் உருப்படாததற்குப்
பத்து காரணங்கள்...!

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்
போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!
இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன்
புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற
தேசங்களின் பட்டியல் தான் இது.
கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம
எதிரியாகவே பார்க்கப்படும் நிலை.
ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான
ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன்
என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும்,
டில்லியிலும் தமிழனுக்கு எதிரான
அரசியல். ஜெர்மனியில் கூட
நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத்
தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும்
திட்டமிட்டு அவனுக்கு கட்டம்
கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான்
என்ன?

1*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!
எந்த இடத்தில் விட்டாலும் அதில்
மூளையைச் செலுத்தி முன்னேறும்
ஆற்றல். அந்த
தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன்
மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும்
தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன்
வேறு மண்ணில் பிழைக்கப் போகும்
போது அங்கு அவன் காட்டும் ஆற்றல்
மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும்
கொள்ளச் செய்கிறது. அதற்குத்
தீர்வாக தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க
விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவ
செயல்படுகின்றனர்.

2* தமிழன் அறிவாளி. ஆனால்,
புத்திசாலி அல்ல. இரண்டுக்கும்
வித்தியாசம் உண்டு. தன்
அறிவை எல்லோருக்கும் பயன்பெறத்
தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ்
ஆல்வா எடிசன்). தன் அறிவையும்
மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக
பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்
(உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்).
பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப்
பார்த்து வயிறு எரிகிற
மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலை
அதனால் ஒரு நிலையில் அநியாயம்
செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக்
கொள்கிறான்.

3* மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்...
இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும்
ஒரு வினோத
ஒற்றுமை உண்டு.தம்மவர்கள்
முன்னேறினால் பொறுக்காது.
ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில்
இன்னொரு நாய் வரும்போதுதான்.
அது போல சக பெண்ணின் முன்னேற்றம்
இன்னொரு பெண்ணைத்தான் மனம்
சுருங்கச் செய்யும். இது உண்மை.
அதைப்போலவே ஒரு தமிழன்
முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப்
பிடிக்காது. தன் இனத்தவனைக்
கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.
இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும்
மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொ
ள்கின்றனர். பிழைக்கப் போன
வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச்
செய்கிறான். கடைசியில் எல்லாத்
தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது.
தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம்
சுலபம்.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு
ஒரு மலையாளியோ, தெலுங்கரோ,
கன்னடரோ பிழைக்க வந்தால், தான்
காலூன்றியவுடன், தன் மண்ணில்
இருந்து பிழைக்க வருபவனைத்
தேடிப்பிடித்து அரவணைத்துக்
கொள்கிறார்கள்.
திட்டமிட்டு அழைத்துக் கொண்டும்
வருகிறார்கள்.
இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு
மலையாள
வீட்டு உரிமையாளர்களே சென்னையில்
உண்டு. அதுபோல
கடை உரிமையாளர்களும் உண்டு.
குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது
தமிழனுக்கு அதிக வாடகை.
நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

4*பெண்ணாசை
பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய
இனம் என்றெல்லாம் வித்தியாசம்
கிடையாது
என்றாலும் கூட ,
தமிழனுக்கு காலகாலமாக
மரபணுவிலேயே அது கொஞ்சம்
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத்
தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் ,
பின்னால் வந்த குறு நில மன்னர்கள் ,
என்று பெண்ணாலும் அழகிய பெண்களை
முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட
விதத்திலும் பெண்ணால்
அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் .
இன்றும் கூட பெரிய வணிக
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு
வேற்று மாநிலப்
பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள்
அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள்
பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன்
பெறுகின்றனர்.

5* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும்,
தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க,
சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத்
தள்ளி வைப்பார்கள். உதாரணமாக
கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல்,
தினசரி ‘அரிவராசனம்’பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க
வைக்கும். அது மலையாளிகளின்
ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத,
சாதி உணர்வுகளுக்காக, தமிழ்
உணர்வையும், தமிழின உணர்வையும்
தரையில் போட்டு மிதிப்பான்.
இலங்கையில் முதன் முதலாக
பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ்
பேசும் முஸ்லிம்களுக்கும் தான். ஆனால்,
தமிழர்களில் பெரும்பான்மையான
இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான்
நமக்கு நெருக்கம்
என்று அவனோடு உறவாடி தமிழ்
முஸ்லிம்களை எதிர்த்தனர்.
அங்கே மொழியை விட மதம் பெரிதாகப்
போனது.
ஜாதி என்று காரணம் காட்டித்
தமிழனை தமிழன் தள்ளி வைத்தான். புறக்கணித்தான்.
அங்கே மொழியை விட சாதி பெரிதாகப்
போனது. அங்கும் இன உணர்வில்லை.

6* தன் அடிப்படை அடையாளங்களை,
விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற
கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
இன்னொரு குணம்.
ஒரு வங்காளி எங்கு போனாலும்
வங்காளியாகவே இருப்பான்.
ஒரு மலையாளி எங்கு போனாலும் தன்
கலாசார வேர்களைக்
கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன்
அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன
உணர்வு தமிழனிடம் இல்லாததால்
மரியாதை கிடைப்பது இல்லை.
ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள்
ஆகிறான்.

7* இரண்டு மலையாளிகள் சந்தித்துக்
கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள்.
இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்
டால் தெலுங்கில் பேசுவார்கள்.
இரண்டு கன்னடர்கள் சந்தித்துக்
கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்க
ள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக்
கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால்
தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த
கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை.
அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக
மாறுகிறது. தாய்மொழியை தாய்
மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த
இனமும் உருப்பட
முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய
சாட்சி!

8* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட
போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக
உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின்
களமாக இருந்த பல நிலங்கள், தமிழின
கலாசாரமாக சின்னமாக இருந்த
நிலங்கள்,நியாயமாகத்
தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல
வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும்
இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால்
திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன.
அப்போது திராவிட நாடு என்ற கனவில்
இருந்த தி.மு.க.,அதையெல்லாம்
எதிர்த்தால் அந்த மாநிலங்களில்
ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி,
தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத்
தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட
நாடு என்ற சித்தாந்தம் காரணமாக
பெரியாரும் இதைத் தடுக்காமல்
வேடிக்கைப் பார்த்தார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட
போது, ஆந்திர, கேரள, கர்நாடக
மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த
தமிழர்கள் எல்லோரும்
பதவி பறிக்கப்பட்டனர் . விரட்டப்பட்டனர் .
அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள்
அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற
பெயரில் எல்லோரையும்
தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த
மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர்,
அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப்
பார்த்துக்கொண்டே, தங்கள்
மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர்.
தமிழனை சுரண்டினர். தமிழன்
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,
மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

9* ஆந்திராவோ, கர்நாடகாவோ,
கேரளாவோ அந்த மொழி இனம்
சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக,
ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம்,
அரசியல் தலைவர், ஆள்வோர்
அதை அடக்கச் சொன்னாலும் அதிகார
வர்க்கமும்,காவல்துறையும்
போராட்டக்காரர்க ளை பூப்போலக்
கையாளும். அவர்கள் எல்லாம்
உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்
நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான்
என்ற உணர்வு அங்கு பலருக்கும்
இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக
பெங்களூரில் மறியல் செய்த
தமிழர்களை கர்நாடக போலீஸ்
எப்படி புரட்டிப்
புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்?
நமது மீனவர்களை சிங்களக்
கடற்படை என்ன செய்தாலும்
கவலை இல்லை. ஆனால்
அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும்
சிங்கள மீனவர்களைப்
பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில்
குளிப்பாட்டி,சொ றிந்து விட்டு,
சொடக்கெடுத்து,
தலைவாழை இழைபோட்டு,
உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக் கும்
தமிழக போலீஸ்...
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக,
தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக்
கல்லூரிக்குள்ளே
யே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக்
காவல்துறை.

10*தமிழன் வீழக் காரணம் தமிழன் தான் தமிழனை தமிழன் காட்டிக் கொடுத்தன்...
காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதி
மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும்,
அது கட்சி அரசியலோடு நின்றுவிடும்.
கன்னட இனம் அழியும்
போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட
மாட்டார்கள். ஆனால், தொப்புள்
கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000
தமிழர்கள் கொசுக்கள் போல
நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக்
கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட
உருப்படியாகப் பலன் தராத
ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக
ஓட்டு வியாபாரம் செய்த தமிழக
வாக்காளர்கள்...
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்பட
வும், இப்படிப் பல காரணங்கள்....
பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன்
இல்லை. அழிக்கப்படும்
வாய்ப்பை தானே தருபவன். அதனால்
தன்னைத் தானே அழித்துக்கொள்பவன்.
மாறவேண்டும்.
இல்லையென்றால்
இன்னும் நாற வேண்டி வரும்...!!!

யாழறிவன்...Yalarivan jackson Jackie

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக