திங்கள், 20 அக்டோபர், 2014

தமிழனும் உலக வரலாறும்

தமிழனும் உலக வரலாறும்...

பகுதி-2

பக்தி இயக்கக் காலம்

மாணிக்கவாசகர்…!!!இத்தனை வருடங்களுக்குப் பின் நாம் இப்பொழுது அவரைப் பற்றிப் பார்ப்பதற்கு இரண்டுக் காரணங்கள் உள்ளன.

ஒன்று… இவர் வாழ்ந்தக் காலம்.
இரண்டு… இவர் எழுதிய வரிகள்.

முதலில் இவர் வாழ்ந்தக் காலத்தினைப் பற்றிப் பார்ப்போம்.

இவர் காலம் ‘பக்தி இயக்கக்’ காலம்.

“பக்தி இயக்கமா அப்படினா???” என்கின்றீர்களா.
சொல்கிறேன்.

சென்றப் பதிவில் இந்தியா முழுவதும் எவ்வாறு சமணமும் பௌத்தமும் பரவி இருந்தன என்பதனைப் பார்த்தோம்.

கடவுள் இல்லை என்றக் கோட்பாடு தமிழகத்திலும் பரவி இருந்தது.

சைவ வைணவச் சமயங்கள் என்ன ஆகுமோ என்றுப் பலரும் எண்ணிக் கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்தக் காலம் வந்தது.

திடீர் என்று சைவக் கருத்துக்கள் ஒரு எழுச்சியைக் கண்டன. கூடவே வைணவக் கருத்துக்களும்.

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றியச் செய்தி இங்கும் அங்குமாக கேட்க ஆரம்பித்தன.

இறை பக்தர்கள் ஊர் எங்கிலும் தோன்றத் தொடங்கினர்.
காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், அப்பர், சுந்தரர், திருமூலர் போன்ற நாயன்மார்களும் ஒவ்வொருக் காலத்தில் தோன்றி சைவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.

அதைப் போலவே நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்களும் வைணவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.

தத்துவக் கருத்துக்கள் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடின.

மன்னர்கள் மாறத் தொடங்கினர்.

“கடவுள் இல்லையா… எம்பிரானை உணர்ந்த பின் நான் எவ்வாறு ஐயா அவ்வாறு சொல்லுவேன்… அவனின் திருவிளையாடல்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?… அவனது செய்திகள் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?… பின் எவ்வாறு ஐயா அவன் இல்லை என்கின்றீர்?”
என்று மன்னர்கள் கூற சமணமும் பௌத்தமும் பின் வாங்கத் தொடங்கின.

“உனக்கு தெரியுமா, சோழன் வைணவத்திற்கு மாறி விட்டாராம்… பாண்டியரும் சைவத்திற்கு மாறி விட்டாராம்…” என்று மக்களும் மாறத் தொடங்கினர்.

பக்தி இலக்கியங்கள் முன்பில்லா அளவிற்கு வளர்ச்சி அடைந்தன.

திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் போன்ற நூற்கள் இறைவனை மக்களிடத்துக் கொண்டுப் போய் சேர்த்துக் கொண்டு இருந்தன.

கோவில்களில் தேவாரங்கள், திருவாசகப் பாடல்கள் பக்தியினைப் பறைசாட்டிக் கொண்டு இருந்தன.

மக்கள் இறைவனை உணர்ந்துக் கொண்டு இருந்தனர்.
இறைவன் உணர்த்திக் கொண்டு இருந்தான்.

அத்தனையும் நடந்தது தமிழில்…. தமிழ்நாட்டில்!!!

தமிழ்நாட்டில் எழுந்த இவ்எழுச்சி இந்தியா முழுவதும் பரவுகின்றது.
சமணமும் பௌத்தமும் இந்த எழுச்சியின் முன் நிற்க முடியாது கரைகின்றன.

இந்தியா மாறுகின்றது…

கடவுள் இல்லை என்ற நிலையில் இருந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலைக்கு!!!

இந்தக் எழுச்சியின் காலம் தான் பக்தி இயக்கக் காலம் (கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை).

இந்த எழுச்சியைப் பரப்பியது தான் ‘பக்தி இயக்கம்’.

அடடே, இவ்வளவு நடந்து இருக்கு ஆனா நமக்கு எதுவுமே தெரியலையே என்று எண்ணுகின்றீர்களா?

தவறில்லை. இது நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தான்.

ஏனெனில்,

சைவ வைணவ மதங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியப் பகுதியான இந்த பக்தி இயக்கக் காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருட்டடிப்பா ஏன் என்றுக் கேட்பவர்களுக்கு…

“ஏங்க நாங்க சமசுகிருதம் தான் இறைவன் மொழி அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்…. அப்படி இருக்கும் போது ஏன் சைவ வைணவ சமயங்கள் சமசுகிருதத்தில் எழுச்சி பெறாமல் தமிழில் எழுச்சி பெற்றன அப்படின்னு நீங்க கேட்டா நாங்க என்னங்க விடை சொல்றது. கேள்வி கேட்குறது சுலபம்… விடை சொல்றது தான் கடினம்… புரிஞ்சிக்கோங்க!!!”

வடநாட்டில் வடமொழியில் உருவான மதம் என்று சொல்லப்படும் ஒன்று ஏன் தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் எழுச்சிப் பெற வேண்டும் என்றக் கேள்விக்கு வடமொழியின் புகழினைப் பாடுபவர்களிடம் இருந்து விடை இல்லை என்பதே உண்மை.

நிற்க!!!

சரி… பக்தி இயக்கத்தினை கண்டாயிற்று.

கடவுள் இல்லை என்ற நிலைமை தமிழால் தமிழ் நாட்டில் கடவுள் இருக்கின்றார் என்ற நிலையாய் மாறிவிட்டது.

இப்பொழுது நாம் மாணிக்கவாசகரிடம் மீண்டும் செல்லலாம்.
அவர் சில வரிகளை கூறி இருக்கின்றார்.

அந்த வரிகள் நம் பயணத்திற்குரிய அடுத்தக் கதவினை திறக்கும் சாவிகள்!!!
பயணிப்போம்…!!!

தென்னாடுடைய சிவனே -
திருவாசகம்…!!!

மாணிக்கவாசகரால் பாடப்பட்டு இறைவனால் எழுதப்பட்டது என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு நூல்.

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று அல்ல என்பதினை இந்நூலினைப் படித்தோர் அறிவர்.”

சரி அது அப்படியே இருக்கட்டும். பிழையில்லை… ஆனால் நம்முடைய கேள்விக்கு பதில் இந்த நூலினில் இருக்கின்றது என்று சொன்னீர்களே அது எங்கே?
ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அந்தச் சமயங்கள் வளர்ந்தன… தமிழில் அவ்வாறு என்ன இருக்கின்றது?” என்று கேட்கின்றீர்களா…

இதோ மாணிக்கவாசகரின் பதில்.

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

தமிழர்களின் சிந்தனை எப்பொழுதும் பரந்து விரிந்தது. இதனை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” போன்ற கூற்றுகளின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அவர் அவ்வாறு சொல்ல வேண்டியக் காரணம் என்ன?
அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா?

“அட என்னங்க… மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” என்றுக் கூறுகின்றீர்களா. உங்களின் கவனத்திற்கு,

ஒருக் கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும். இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும்.

சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா.

வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.

தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா.

இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒருக் கருத்து ஆகி விடும். எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.

மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.

‘தென்னவனின் நாடா???”

சற்று விளக்கமாகப் பார்ப்போம். இங்கே தான் மொழி அறிஞர்கள் நம் உதவிக்கு
வருகின்றார்கள்.

தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

“பழைய நாடா???” - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக்கண்டத்தையேதான்.

ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

ஏனெனில், இறைவன் மனிதனை முதன் முதலில் படைத்தது இக்கண்டத்திலேயே தான்.

ஏன் இறைவனைப் பற்றிய எழுச்சி தமிழகத்தில் தமிழில் எழுந்தது?

ஏனெனில், உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் இறைவனிடம் பேசிய மொழி தமிழ்!!! இவை தான் அந்தக் கேள்விகளுக்கு பதில்… நிற்க!.

இப்பொழுது புதிதாய் பல கேள்விகள், மறுப்புக் கருத்துக்கள், விமர்சனங்கள் நிச்சயம் உங்கள் மனதில் தோன்றி இருக்கும். அவற்றிற்கு அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று செய்திகள் மூலமாகவும் விடையினை நாம் மெதுவாகப் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னாள் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன.

ஒன்று:
இன்று அறிவியல், மனிதகுலம் தோன்றி இருக்க கூடும் என்று எண்ணும் இடம், இன்றைக்கு ஆப்பிரிக்காவிற்கும் ஆசுதிரேலியாவிற்கும் இடையில் இருக்கும் இந்து மகாக்கடலே ஆகும். உயிர் தோன்ற அங்கே இருந்த சூழலே சரியாக இருந்து இருக்கும் என்று அறிவியல் எண்ணுகின்றது.
அந்த இடம் நம் தமிழ் இலக்கியச் செய்திகளில் குமரிக்கண்டம் எங்கே இருந்தது என்றுக் கூறப்படுகின்றதோ அதே இடத்துடன் ஒத்துப் போகின்றது.

குமரிக்கண்டம், இந்தியா- ஆசுதிரேலியா-ஆப்பிரிக்கா ஆகிய இந்த மூன்று நிலங்களையும் இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு என்பது ஒருக்கருத்து.

இந்தக் கருத்து சில ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. உதாரணமாய் ஆசுதிரேலியாவில் உள்ள பழங்குடி மக்களின் மொழியினைப் பற்றிய ஆராய்ச்சியில் அம்மொழி தமிழினை ஒத்து இருக்கின்றது என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது.
அவர்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள்.
இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இரண்டு:
எந்த ஒரு சமயத்திற்கும் மட்டும் உரியதாக இல்லாமல் அனைத்து சமயங்களையும் அரவணைத்துக் கொண்டு நிற்கும் மொழி உலகில் தமிழன்றி வேறு இல்லை. தமிழில் மட்டுமே அனைத்து சமயங்களுக்கும் மூல நூல்கள் தோன்றியுள்ளன. மொழிப்பெயர்ப்பது வேறு. அந்த மொழியினைக் கற்றுக் கொண்டு அம்மொழியினில் தங்களின் சமயத்தினைப் பற்றி எழுதுவது வேறு.
தமிழில் உலகில் உள்ள பெரு மதங்கள் அனைத்திற்கும் மூல நூல்கள் உள்ளன.

சைவம் - பன்னிரு திருமுறை

வைணவம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

சமணம் - சிலப்பதிகாரம்

பௌத்தம் - சீவக சிந்தாமணி

கிருத்துவம் - தேம்பாவணி

இசுலாம் - சீறாப்புராணம்

உலகில் உள்ள வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை!!! மேலும் தமிழ் ஆன்மீக மொழியாக மட்டும் இல்லாமல் அறிவியல் மொழியாகவும் திகழும் பாங்கும் இங்கு கவனிக்கத்தக்கது.

சரி…!!!

இப்பொழுது ‘உலகின் முதல் மனிதன் தமிழன்- அவன் படைக்கப் பட்டது குமரிக்கண்டத்தில்’ என்ற செய்தியினை நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. அதற்கு உலகம் முதலில் எவ்வாறு தோன்றிற்று என்பதனை நாம் பார்க்க வேண்டும்.

உலகத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை பலக் கதைகளும் நூல்களும் விளக்கிக் கொண்டு இருக்கின்றன.

வடநாட்டுக் கதை
விவிலியம்
பரிபாடல் (தமிழ் சங்க இலக்கிய நூல்)
கூடவே அறிவியலும் ஒரு விளக்கத்தினைக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றது.
அடுத்தப் பதிவுகளில் நாம் இவற்றினைப் பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். அதுவும் குறிப்பாக விவிலியத்தினைப் பற்றி.

கடவுள் உலகினைப் படைத்தாரா? இல்லை உலகம் அதுவாக ஒரு விபத்தினால் உருவாயிற்றா? முதல் மனிதன் யார்… முதன் மொழி என்ன?
காண்போம்!!!

உலகின் தோற்றம் -

உலகம் எவ்வாறு தோன்றிற்று…
அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்?

இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை.

சரி இப்பொழுது அந்தப் பதில்களைப் பற்றிப் பார்க்கலாம்!!! பொதுவாக இந்தக் கேள்விக்குரிய பதில்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்..

உலகத்தினை கடவுள் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார். - இது இறை நம்பிக்கையாளர்களின் கூற்று.

உலகம் ஒரு விபத்தினால் உருவானது. அதில் தற்செயலாய் உயிர் உருவானது. அந்த உயிரின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உருவானான். - இது அறிவியல் நம்பிக்கையாளர்களின் கருத்து.

உலகத்தினையும் மனிதனையும் கடவுள் படைத்தார்… ஆனால் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல் - இது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல் இருப்பவர்களின் கருத்து. (இன்றைய காலத்தில் இந்தக் கருத்தினை உடையவர்களே அதிகமாக இருக்கின்றனர்)

சரி… இப்பொழுது உலகத்தின் தோற்றம் பற்றி பல காலமாக கூறிக் கொண்டு இருக்கும் நூல்களையும் கதைகளையும் அறிவியலையும் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வட நாட்டுக் கதை.

வடநாட்டுக் கதை கூறும் உலகின் தோற்றம்:

வடநாட்டுக் கதை என்பது ஆரியர்களின் கதை.

இக்கதையின் படி, சிவனும் பார்வதியும் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து இருந்ததினால் உலகம் தோன்றிற்று. அப்படிப்பட்ட உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.

பிராமணர்கள் - பிரமனின் தலையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சத்திரியர்கள் - பிரமனின் நெஞ்சில் இருந்துத் தோன்றியவர்களாம்.

வைசியர்கள் - பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சூத்திரர்கள் - பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.

மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பஞ்சமர்களாம். நிற்க.

இந்தக் கதையினில் அறிவியலினை நாம் எங்காவது காண முடிகின்றதா… இல்லை ஆன்மீகத்தினையாவது காண முடிகின்றதா?

கதையினை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால், இல்லை என்பதே நமது பதிலாக இருக்க முடியும். அதுவும் கடவுள் தான் மனிதனைப்  படைத்தார் என்றக் கொள்கையினை இந்தக் கதையே மறுத்துக் கொண்டு இருக்கின்றது (பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால் அவர்கள் தோன்றியது எப்படி?).

அறிவியலும் இல்லை, ஆன்மீகமும் இல்லை, வரலாற்றுச் சான்றுகளும் இல்லை… அனைத்துக்கும் மேலாக தெளிவான படைப்பின் விளக்கமும் இல்லை. எனவே இந்தக் கதை வரலாற்று உண்மை அல்ல… வெறும் கதை என்றே நாம் முடிவிற்கு வர வேண்டி இருக்கின்றது.

இப்பொழுது நாம் அறிவியல் கூறும் கூற்றினைக் காண்போம்:

உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang Theory) தற்செயலாய் தோன்றியது. முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர் தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படி பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.

ஒரு செல் உயிரியாய்!!!.

அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாய் ஆகி உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப் பார்த்தால்
நமக்கு புலனாகும். பாருங்கள் குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப் போலவே அமைந்து இருக்கின்றன. எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.

இதுவே அறிவியலின் கூற்று… மன்னிக்கவும்… ஐரோப்பிய அறிவியலின் கூற்று!!!

ஐரோப்பிய அறிவியலா… இது என்ன புது கதை என்கின்றீர்களா? இந்தக் கதையையும் தான் பார்த்து விடுவோமே!!!

ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது. உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை.
ஐரோப்பிய அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.

உயிருள்ள பொருட்கள் - மனிதன், விலங்குகள் (Living Things ) (இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

உயிரற்றப் பொருட்கள் - கல், மரம் (Non - Living things )

அந்த அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்றக் கேள்வி வருகின்றது.

கூடவே இந்த அறிவியல் உயிரினைப் பற்றி ஆராயவில்லை என்றால் உயிரினைப் பற்றி ஆராயும் அறிவியல் இருக்கின்றதா என்றக் கேள்வியும் வருகின்றது. அந்தக் கேள்விக்கு பதில்… ஆம்! உயிரினைப் பற்றி அறிந்த அறிவியல் இருக்கின்றது. நீண்ட காலமாக நம்முடனே இருக்கும் தமிழ் அறிவியல் தான் அது.

ஐரோப்பிய அறிவியல் பொருட்களைப் உயிரின் அடிப்படையில் பிரிக்கின்றது என்றுக் கண்டோம். வேறு பிரிவுகள் அதில் கிடையாது.

ஆனால் தமிழ் உயிரினங்களையே அறிவின் வழி பிரித்து இருக்கின்றது.
ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை என்று அந்தப் பிரிவுகள் நீள்கின்றன.

மேலும் தமிழ் தன் திணை இலக்கணத்தின் மூலம் மனிதர்களுக்கு உயர்திணை (அவர்கள் மற்ற உயிர்களில் இருந்து சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில்) என்றச் சிறப்பினையும் கொடுத்து இருக்கின்றது.

இத்தகைய பிரிவுகளை அறியாத தொடக்க நிலையிலேயே ஐரோப்பிய அறிவியல் நிற்கின்ற காரணத்தினால் உயிரின் தோற்றம் பற்றிய ஐரோப்பிய அறிவியலின் கூற்றினை நாம் ஏற்க முடியாது.

ஐரோப்பியர்களின் அறிவியல் உலகம் தட்டையானது என்று கூறிக் கொண்டு இருந்தக் காலத்தில், உலகை கப்பலில் சுற்றிய அறிவியல் நம்முடையது. எனவே நாம் அவர்கள் கூற்றினை ஆராயாது ஏற்றுக் கொண்டால் தட்டையான உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
எனவே,

    ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியாத நிலையினாலும்,
    டார்வினின் கருத்து வெறும் கருத்தே அன்றி அறிவியல் கிடையாது என்ற நிலையினாலும்,
    குரங்கில் இருந்து எந்த ஒரு மனிதனையும் உருவாக்கிக் காட்டாமையினாலும்,
    வெற்று இடத்தில் இருந்து உயிரினை உருவாக்கிக் காட்டாமையினாலும்,

ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வட நாட்டுக் கதையும் விளக்கம் தரவில்லை… ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை.  எனவே இப்பொழுது நாம் இரு வேறு கதைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

ஒன்று பரிபாடல் - தமிழ் சங்க இலக்கியம்.

இரண்டு விவிலியம் (பைபிள்)

இந்த இரண்டுக் கதைகளிலும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இருக்கின்றது. இரண்டுமே உலகம் ஆறு ஊழிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றன.

‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
விவிலியத்தின்படி இறைவன் ஐந்து ஊழிக் காலத்தில் உலகினைப் படைத்து முடித்து இறுதியாக ஆறாவது ஊழிக் காலத்தில் மனிதனைப் படைத்தார்.
சிறிது நிறுத்துங்கள்…!!!

நீங்கள் பாட்டுக்கு ஊழிக் காலங்கள் என்று சொல்லுகின்றீர்கள்… கடவுள் 6 ஊழிக் காலங்களில் அல்ல, ஆறு நாட்களில் உலகினைப் படைத்து உள்ளார்… என்கின்றீர்களா?

அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு…
விவிலியம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூலே ஆகும்.
விவிலியத்தின் மூல மொழி எபிரேயம். அந்த மொழியில் இருந்தே எல்லா மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில் சில கருத்துக்கள் மாறுப்பட்டு வந்து இருக்கலாம். ஆங்கிலத்தில் ஊழி என்ற சொல்லுக்கு தகுந்த வார்த்தை இல்லாதக் காரணத்தினால், ஆறு ஊழிக் காலங்கள் என்ற கால அளவு ஆறு நாட்களாக மாறிப் போய் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடி டுடிகொரின் (Tutikorin ) ஆக மாறியது உங்களுக்குத் தெரியுமல்லவா!!! அதுப் போலத் தான்!!!

சரி… எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் விவிலியத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது என்பதினைப் பார்த்தோம். ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா? விவிலியத்தில் உண்மை இருக்கின்றதா? … என்பதனை ‘ஆதாம் என்ற தமிழன்’ என்ற அடுத்த பதிவில் பார்ப்போம்.

விவிலியம் அழைக்கின்றது!!!

பி.கு:
தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?

உலகின் முதல் மனிதன் தமிழன் என்னும் கூற்றின் படி. உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும், எபிரேயத்தில் ஆதியாகமக் கதைகளாகவும் தொகுக்கப் பட்டு உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து!!!

தொடரும்... பகுதி-3 பார்க்கவும்..
யாழறிவன்... Yalarivan Jackson Jackie...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக